பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. கடல் சிரித்தது !

கடலுக்கு ஒரே சந்தோஷம் !

கலையழகு மிக்க தன் அலைக்கரங்களால் கரையைத் தழுவித் தழுவி தன் கழிபேருவகையை அதிகமாகக் காட்டிக் கொண்டிருந்தது.

காலைக் கருக்கல் பொழுதினிலே கடலுக்கு என்ன அவ்வளவு மகிழ்ச்சி ? வளைத்துக் கொண்டிருந்த இரவின் கருமையோ, வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டதே அதற்காகவா !... அல்ல.

பிரிந்த குழந்தையின் இளஞ்சிவப்பு முகமாக சூரியன்ஆழியிலிருந்து உந்தி வந்திருக்கிறானே என்பதற்காகவா... அல்ல...அல்ல.

பின் வேறென்ன காரணமாக இருக்கும் ?

கடற்கரையில் மக்கள் கூட்டம் மகிழ்ச்சிகூட்டம்....

'மாலேயில்தானே கூட்டம் வரும் ? நோட்டம் விடும்... ஆட்டம்போடும். தினம் நடக்கும் திருவிழாகோலம். அது