பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148



அப்படி அயர்ந்து போயிருக்கக் கூடாது என்று குணசேகர் பேச்சைத் தொடங்கினார்.

நீங்கள் உங்கள் நோக்கத்தில் வெற்றிபெற வேண்டும் என்று மனமார விரும்பினீர்கள். அந்த தூய்மையான ஆசையில் விழுந்த ஒரு சிறு கீறலைக் கூட உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த அதிர்ச்சி தான் உங்கள் உடலையை ஆக்ரமித்து அல்லோலகல்லோலப் படுத்தி விட்டது. இனிமேல் எந்தப் பிரச்சினையும் இல்லை.

விளையாட்டு தான் வேடிக்கைகாட்டும் என்பார்கள். நமக்கோ வெற்றியே விளையாட்டு காட்டி விட்டது. நல்ல விளையாட்டு - திருவிளையாடல் போல என்றார் இன்பநாதன்.

குணசேகர் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குணசேகரிடமிருந்து வந்த சிரிப்பு அது.

இன்பநாதனும் கூடவே சேர்ந்து சிரித்தார். இந்த சிரிப்பு கூட்டத்தில் நேசலிங்கமும் குணசேகர் மனைவி முத்துலெட்சுமியும் சேர்ந்து கொண்டார்கள்.

இப்படியாக குணசேகர் வாழ்க்கை செழித்துக் கொண்டது. மனமும் உடலும் தெளிவு பெறப் பெற குணமாகிக் கொண்டு விடுகிறார். நாமும் அவரது நல்ல மனதை வாழ்த்துவோம்.

இதோ குணசேகர் தாங்கித் தாங்கித் தள்ளாடித் தள்ளாடி நடைபழகுகிறார் நமது நாட்டு விளையாட்டுத் துறைபோல. நேசலிங்கம் அவருக்கு நடைபழகிட உதவிக் கொண்டிருக்கிறான் உண்மையான ஆர்வமுள்ள நல்லவர். கன் விளையாட்டுத் துறைக்கு உதவுவது போல.