பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. புதிய பார்வை

குணசேகரும் சுப்ரமணியமும் மணற்பரப்பை விட்டுத் தார் ரோட்டுக்கு வந்தபோது, மணி ஏழாயிற்று, வெயில் சற்ற வேகத்துடன் காயத் தொடங்கியது.

அதைத் தாங்க முடியாதவர் போல காணப்பட்டார் குணசேகர். இருந்தாலும் சுப்ரமணியத்தை சமாளிப்பதற்காகப் பேசத் தொடங்கினார்.

என்ன சுப்ரமணியம்! ஏதாவது நான் செய்ய வேண்டுமா! இனிமேல் அலுவலகத்தில் என்னைப் பார்க்க முடியாது. அங்கே நான் உனக்காக செய்கின்ற எந்த சிபாரிசும் எடுபடாது. வேறு எங்கேயாவது இருந்தால், வந்து பார். முடிந்தால் உதவி செய்கிறேன்.

அதற்கென்னங்க! உங்க அன்பு எப்பொழுதும் எனக்கு இருந்தா போதுங்க--அட்புறம் வந்து பார்க்குறேங்க. சுப்ரமணியம் தலையை சொறிந்தபடி சொல்லி முடித்து விட்டு, பின்புறமாக இரண்டு தப்படி வைத்து நடந்து, பின்பு புறப்பட்டுவிட்டார். அவர் அதற்குப் பிறகு அவரைத் திரும்பிக் கூடப்பார்க்கவில்லை.