பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23

சுப்ரமணியத்தின் நடவடிக்கையினை மிக சுவாரசியமாக ரசித்துக் கொண்டிருந்தார் குணசேகர். மனிதன் தனக்கு உதவி வேண்டும் என்கிறபொழுது எப்படியெல்லாம் பணிவாக நடந்து கொள்கிறான், தனது தேவை தீர்ந்துவிட்ட பொழுபடியெல்லாம் திமிராக மாறி விடுகிறான் ! மனிதனைப் போல் கொடுமையான மிருகம் இந்த பூலோகத்தில் கிடையாது என்பது சரியாகத்தான் இருக்கும் போல இருக்கிறது.

இப்படி சிந்திக்க எப்பொழுது ஆரம்பித்தோம் என்பது அவருக்கே புரியாமல், நின்று கொண்டிருந்தார்.

எதிரே ஒரு கார் வந்து, சத்தம் போட்டு நின்றது கூட அவரது கவனத்தை மாற்றவில்லை பலத்த ஹாரன் சத்தம் கேட்டு, விழித்து கொண்டார். படுத்துத் தூங்குவதற்கு வீடு இல்லை என்றா, தார் ரோட்டில் வந்து நின்றுகொண்டு தூங்குகிறீர்கள் என்ற குரல் அவருக்கு ஏற்கனவே பழக்கமான குரல் தான்.

அந்தக் குரலுக்கு உரியவர் இன்பநாதன். ஆப்த நண்பருங்கூட தமிழ் படித்த அவர் சில காலம் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர் பின்னர் அந்தப் பள்ளியின் உரிமையாளர் கேட்டுக் கொண்டதற்கினங்க உடற் கல்வித்துறை ஆசிரியராகப் பயிற்சி பெற்று, உடற்கல்வி ஆசிரியராகவும் இருந்தவர்.

பல விளையாட்டுகளுக்கும் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிவர். இப்பொழுது அபோன்ற பதவி, பொறுப்பு, பணி அனைத்திலிருந்தும், விடுப்பு பெற்று ஓய்வாக இருப்பவர்.அறுபது வயது ஆனாலுங்கூட, இன்னும் மிடுக்காக நிற்பவர். மிலிட்டரி நடை என்பார்களே, அப்படி நடப்பவர்.