பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

இன்பநாதன் சிரிப்பொலி எதிரொலித்தது, குணசேகர் வெட்கப்பட்டவராய் மெதுவாக நகர்ந்தவாறு சிரித்துக் கொண்டார்.

உங்களை இங்கே நான் எதிர்பார்க்கலே என்றார் குணசேகர்.

எதிர்பாராதது நடப்பதுதான் வாழ்க்கை. சொல்படி நடப்பது incident, சொல்லாமல் நடப்பது Accident. நீங்கள். இன்னும் கொஞ்ச நேரம் தார் ரோட்டில் நின்றிருந்தால், சொல்லாததுதான் நடந்திருக்கும் என்று சிரித்தார் இன்பநாதன்.

உண்மைதாங்க! இயற்கையைப் பற்றி நினைக்கும் பொழுது மனதுக்கு இதமாக இருக்குது. மனிதர்களைப் பற்றி நினைக்கத் தொடங்கிவிட்டாலே, மயக்கம்தான் வருது.

நீங்க சொல்றதுல ஞாயம் இருக்கத்தான் இருக்குது. மனம் இருக்குறதுகனாலதான் . மனுஷன் இப்படி இருக்கிறான். நொடிக்கு நூறாயிரம் சிந்திக்குற மனசுள்ளவன், எப்படி நல்லா இருக்க முடியும் ! அதை அடக்க முடியுறவன் எல்லாம் ஆனந்தமா இருக்குறான். அடக்கத் தெரியாவன், அல்லோல கல்லோலப்பட்டு அவஸ்தைப்படுறான். அவங்களே நினைச்சி கவலைப்படுறதை விட, முயற்சி பண்ணி உதவுறப்பதான். நமக்கும் நிம்மதி கிடைக்கும். பிறந்த பிறப்புக்கும் ஒரு விமோசனம் பிறக்கும்.

இன்பநாதன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் குணசேகர் இத்தனே நேரம் சிலையாக நின்று சிந்தித்து சிந்தித்துக் குழம்பிப் போயிருந்த அவருக்கு, இன்பநாதனின் பேச்சு குழப்பத்தைப் போக்கும் மாமருந்தாகத் தெரிந்தது.

என்ன! இன்னும் யோசனை? வாங்க இப்படி உட்காருவோம் என்று. சாலை ஓரத்தில் இருந்த பெஞ்சிற்கு அவரை