பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25

அழைத்தார்.இருவரும் போய் உட்கார்ந்து கொண்டனர். அமைதி தேடித்தான் அங்கு வருவார்கள். ஆனால் அங்கே கார்களின் சத்தம் லாரிகளின் இரைச்சல் போன்றவை பயங்கர பூமியாக மாற்றிக் கொண்டிருந்தன.

இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் இருவரும் பேசத் தொடங்கினார். குணசேகரின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதிலல்லாவா இப்பொழுது குழப்பம்!

சொன்னதை நினேச்சு பார்க்குறேன். மனிதர்களே மோசம்னு திட்டி மகிழறதைவிட, பாசமா நினைச்சு, முடிஞ்ச வரை உதவி பண்ணி மகிழுறதுல உள்ள ஆத்ம சுகம், வேறெந்தத் துறையிலும் இருக்காதுன்னு நினைக்குறேன், உங்க அபிப்ராயம் எப்படிங்க!

மணிதர்களுக்கு உதவி செய்யுறதுன்னு, முதல்ல யாருக்கு உதவி செய்யனும்? பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடுன்னாங்க, நிலம் தெரிஞ்சு விதையை போடுன்னாங்க. மனிதர்களில் எத்தனயோ விதம் எத்தனேயோ வகை இருக்கு. அதுல, யாருக்கு என்ன செய்தா, எப்படி செய்தா நமக்கு நிம்மதி கிடைக்கும்ங்றது தான் நமக்கு முக்கியம்.

இனிமே நான் எந்தக் கம்பெனிக்கும் வேலைக்கு பேrறதா இல்லே. எல்லா விவரமும் தான் உங்களுக்குத் தெரியுமே! நான் வீட்டிலே உட்கார்ந்து வீணா காலம் கழிக்கவும் விரும்பலே. ஏதாவது நான் இருக்குற சமுதாயத்துக்கு உதவுற மாதிரி உழைக்கனும், அது தான் என் விருப்பம். உங்க உதவியும் ஆலோசனயும் எனக்கு வேணும். அதுவும் இப்வே நான் முடிவு கட்டியாகனும், குணசேகர் கட கட வென்று பேசித் தன் கருத்துச் சிக்கலை அறுக்க முயற்சித்தார்.

இன்பநாதன் விழித்துக் கொண்டார். ஒருவனைப் பார்த்து "போர்க்களம் போ என்பதற்கும், கல்யாணம் செய்துகொள் என்பதற்கும் புத்திமதி சொல்லக் கூடாது" என்பது

ஆ-2