பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29


ஒதுங்கிச் செல்வது நல்லதல்லவா ! என்றதும் கார் புறப்பட்டது.

நான் கேட்ட கேள்வியை நீங்கள் மறந்த விடக் கூடாது. உங்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும், நீங்கள் ஒரு நல்ல பத்திரிகாசிரியர் ஆகலாம் என்பது என் எண்ணம். உங்கள் அபிட் யம் எப்படி ? என்ருர் இன் பநாதன்.

நல்ல பத்திரிகாசிரியரும் அவர் நடத்துகின்ற நல்ல பத்திரிக்சையும் இந்த நாட்டில் விலை போகாது என்பது உங்களுக்குத் தெரியாதா? தெய்வீகப் பத்திரிகை என்பார்கள் . அதிலும் தேவியின் படத்தை ஒரு மாதிரிப் போட்டு விட்டு 'யாராவது கேட்டால் பத்திரிகை விற்க வேண்டாமா என்கிற காலம் இது !

பிறரை கடுமையாக விமர்சிக்க வேண்டும். அப்படி இப்படி என்று சிசுகிசுக்க வேண்டும். 'பின் அப்”, என்றெல்லாம் படம் போட வேண்டும். மற்றவைகளை சொல்வதற்கே நாகூசுகிறது

பண்டையம் பண்பாட்டையும், பெருமித எண்ணங்களையும் வளர்க்க வேண்டிய பத்திரிக்கைகள் தங்கள் வருமானம் பெருக வேன்டும். என்பதற்காக பெருவரிய லாபம் சம்பாதிப்பதர்காக, மக்களுக்கு இத தான் பிடிக்கிறது' என்று தாங்களே ஒரு வரம்பகட்டிக் கொண்டு, வீணாக எழுதி விடுகின்றார்கள்.

தந்தையும் மகளும் அருகருகே உட்கார்ந்து படிக்கக்கூட முடியாத தரங்கெட்ட நிலையில் பத்திரிக்கையின் முன்னேற்றம் இன்று போய் கொண்டிருக்கையில், நல்ல பத்திரிகையை நடத்தி வெற்றியினை பெற முடியும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா ? குணசேகர் குமுறிக் கொண்டே கேட்டார்.