பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45}

குணசேகர் மிகமிக ஆச்சரியத்துடன் அவர்களைம் பார்த்துக் கொண்டிருந்தார். ஏன் இப்படி அவர்கள் கத்திப் பேசுகின் றர்கள் ? கத்திச் சிரிக்கின்றங்கள் பிறர் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்பதற்காகவா ?

தம்புசாமி சீரித்துக் கெண்டார்.

அவர்களே அழைத்து புத்திசொல்லாம் என்றர் குணசேகர். ஆனால் யாரிடம் சொல்வது என்பதுதான் சிக்கலாகி விட்டது.

அவர்கள் தனியாகவா போகின்றர்கள் ? யாரும் கூஉ வரவில்லை போல் இருக்கிறது என்றர் குணசேகர், தம்புசாமி மீண்டும் சிரித்துக் கொண்டார்.

அப்பொழுது ஒரு பையன் வந்து. அன்றைய பேட்டா பணம் வேண்டும் என்று கேட்டான் ! தம்புசாமி ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொடுத்து, எண்ணிப் பார்த்துக் கொள்ளப்பா என்றர். பையனும் வாங்கிக்கொண்டு போய் விட்டான்.

'நீங்கள்தான் கூட வந்தவரா !! சொல்லவே இல்லையே என்றர்.

சொல்லத்தான் ஆசை. சொல்லாமல் இருக்கிறவரை செளகரியம் என்றுதான் முன் கூட்டியே சொல்லவில்லை . காரணம்?

நான்தான் மேனேஜர். ஆனால், என் சொல்லுக்கு அவர்கள் அடங்குவதில்லை. மேலிடத்தின் கட்டளைப்படி கான் கூடப் போகிறேன். ஆரம்பத்திலேயே ஒருத்தன் திர்த்துப் பேசிவிட்டான் நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவுதான் ! தம்புசாமியின் குரலில் தெம்பில்லை.