பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

வயதான ஒரு மாமி, தம்பிகளா ! தலையை வலிக்குது. துங்கணும். கொஞ்சம் சத்தம் போடாம இருக்கிங்களா !

அந்த மாமி பேசியதைப் போலவே ஒருவன் பேசிக்காட்ட, அவர்கள் ஓவென்று சிரித்தார்கள். அந்த சிரிப்பைக் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை விழித்துக் கொண்டு' வீல்' என்று அலறியது.

குழந்தையின் தகப்பன் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்து, பேசாமல் இருக்க மாட்டீங்களா ? பதினோரு மணியாச்சு என்று கொஞ்சம் கோபமாகவே கத்தினர்.

அப்படித்தான் சிரிப்போம். நீ என்ன செய்வே என்றர் ஒருவன்.பிடித்துக் கொண்டான், மடார் மடார் என்றுஅடி இதுவரை அவதிப்பட்ட மக்களில் பலர் அந்த ஆளுடன் சேர்ந்து கொண்டனர். அடிவிழும் சத்தம், அலறல் சத்தம், அந்த கம்பார்ட்மென்ட் ஒரு யுத்தகளம் போல இருந்தது.