பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. ஏன் இப்படி?

பொதுமக்கள் பலரும் இதுவரை பொறுமையாக இருந்த படி, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள். இதுதான் சமயம் என்று புலிபோல பாய்ந்தனர். இப்படி ஏற்படும் என்று நிலைமையை எதிர்பார்க்காத 'கத்தியவர்கள்'; கப்சிப் என்று அடங்கிப் போய் விட்டனர்.

'அடி கொடுத்தது லாபம்' என்று சிரித்தபடியே அவரவர்கள் இடத்தில் போய் அனைவரும் அமர்ந்து விட்டனர். அடிபட்டவர்களோ' நமக்கு நேரம் சரியில்லை' என்று நினைத்தார்களோ என்னவோ பேசாமல் படுத்துக் கொண்டு விட்டார்கள். அடி அவர்களே அச்சப்படுத்தியது என்பது தான் உண்மையான நிலை.

புரட்சி மேடைபோல் தோன்றிய அந்தக் கம்பார்ட் மேன்ட், இப்பொழுது பூஜை அறைபோல மெளனமாகக் காட்சியளித்தது. அத்யாவசிய தேவைச்குகூட யாரும் அங்கே பேசிக் கொள்ளவில்லை.அட்பாட்டம் வலைகதட்டி அடங்கிக் கொண்டது.