ஆனால் இலட்சியத்தை வளர்க்க வந்தவர்கள் எல்லாம் காட்டிய அலட்சியமும், ஆணவமும் அவரை வெற்றி யடைய விடாமல் தடைபோடுகிறது. இடை மறிக்கிறது. ஏனனம் செய்கிறது. இதயத்தையே எரிமலையாக்கி விடுகிறது
அவரது இலட்சியத்தில் அவர் வெற்ற பெற்றாரா? வேதனைகளை விரட்டினாரா? என்பது தான் இந்த நாவலின் கதையோட்டம்.
வெற்றி என்பது தானாக மடிமீது வந்து விழும் கனி அல்ல. அது உழைப்பினால், பெறுகின்ற செல்வமாகும்.
அந்த அற்புத வெற்றியானது, குணமுள்ள குணசேகருக்கு எப்படியெல்லாம் விளையாட்டு காட்டுகிறது என்ற, நிகழ்ச்சிகள் தாம் கதை முழுதும் கண்சிமிட்டிக் காட்டுகின்றன.
யாரும் படிக்கலாம், எந்த வயதினரும் படிக்கலாம். என்னும் அளவில் எழுந்த குடும்ப நாவல் இது.
மனித வாழ்வு இலட்சியத்தினால் நடத்தப்படுகிறது என்பதைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து, கடந்து. முயன்று, வென்று பயன் பெற வேண்டும் என்ற எனது. ஆசை, நியாயமானது தான்.
உங்களுக்கு இந்த நாவல் நிச்சயம் பிடிக்கும். ஏனென்றால், விளையாட்டுத் துறையில் வருகின்ற முதல் நாவல் முற்றிலும் புதிய கோணத்தில் அணுகுமுறை கொண்டது. அதனால் தான் உங்களை நிச்சயம் கவரும், என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் அளிக்கிறேன்.
வெற்றி மட்டும் விளையாட்டு காட்டவில்லை. உற்சாகமும் உவப்பும், உண்மையான இன்பமும் உங்களுடன் விளையாட்டு-