பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

கூட்டம் என்னை விட்டு ஒழிஞ்சது. என் நிலைமையும் சரியா போயிடுச்சு... பழைய வியாபாரம் நடக்குது பணம் நிறைய வந்தது. தப்பிச்சுகிட்டேன்.

தயாளன் பெருமூச்சு விட்டார். அது அவரது விடுதலை’ பெற்ற இன்பத்தின் எதிரொலியாகத் தெரிந்தது.

'நன்றி கெட்ட கூட்டத்திலிருந்து நல்லதோர் விடுதலை"என்று தயாளன் தன் பேச்சை முடித்தார்.

அளவோடு தந்திருந்தா, அவசரத்துக்கு மட்டும் உதவியிருந்தா, அப்பப்ப என்ன நடக்குதுன்னு கேட்டுத் தடுத்து வச்சிருந்தா, உங்களுக்கு இந்த உபத்திரவம், அவமானம் நேர்ந்திருக்காதுங்கறது என் கணிப்பு, நீங்க என்ன சொல்றீங்க ' குணசேகர் நேரடியாகக் கேட்டார்.

உண்மை தான், நான் ஏமாறுவேன்னு தெரிஞ்சு தானே ஏமாத்துறவங்க வந்தாங்க... நான் கொஞ்சம் விழிப்பா இருந்திருந்தா இந்த இழப்பும் பழிப்பும் வந்திருக்காதே; தப்பு என் மேலதான் என்றா தயாளன்.

நீங்க தவறை உங்க மேல போட்டு கிட்டதுனாலதான்.ஈசியா எடுத்துகிட்டிங்க ... அதனாலதான் நிம்மதியா இருக்கிறீங்க என்றார்; இன்பநாதன் . என்னை விடக் கெட்டிக்காரர் இந்த நண்பர் என்று தன் அருகிலுள்ள ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தார் தயாளன் அவர்கள் வியப்புடன் அவரைப்பார்த்தார்கள். "என் பெயர் சிந்தாமணி" என்று சிரித்துக் கொண்டே வணக்கம் செய்தார் அவர்,

ஐம்பது வயதிருக்கும் அவருக்கு. ஆனால் நாற்பது மதிக்கத் தக்க உடல் அமைப்பு, சிரித்த முகம், சிவந்த தேகம், மடிப்பு களையாத ஆடைகள், சென்ட் வீச்சு அவரிடமிருந்து இதமாக வந்து கொண்டிருந்தது, பிறவி பணக்காரர் என்பது அவரைப் பார்த்த உடனே புரிந்தது.