பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


வந்த மாணவர்கள் நல்லவர்களாகவே தோன்றுகிருர் தள். தங்கள் நோக்கத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகம் இருப்பதையும், அதற்கேற்ற மதியூகம் இருப்பதையும் அவரால் கணிக்க முடிந்தது. என்ரு லும், தான் செல்கின்ற பாதை சரிதான என்று அவரால் முடிவுகட்ட முடியவில்லை

இன்பநாதனை ஏறிட்டுப் பார்த்தார் குணசேசர், இன்பவடிவேலுவைப் பார்த்தார். வடிவேலுவோ தனதூட இருந்த மூன்று பேர்களே யும் பார்த்துக் கொண்டிருந் தார்.

ஒவ்வொருவரின் பார்வையும் வெளிப்படையில் பார்த் தால், சாதாரணமாத் தோன்றிலுைம், உள் மன தின் உள்ளே எ த்தனையோ கதைகளைக் கூறிக் கொண்டிருந்தன.

எட்படியோ அறிமுக நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. அனே வருக்கும் திருப்தி தான்.

பயிற்சியாளர்களுக்கும் அறிவித்து விடுவதாக வடிவேலு வாக்குறுதியளித்து விட்டார். அவருக்கு வர வேண்டிய வரவுக்காக தலையை சொறிந்துபார்த்தார். கு ணசேகருக்கோ அவரது சைகைகளும், நயன பால ஷகளும் புரியவில்லே போலும். அவர் எதுவுமே கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்.

இன் பநாதன் இகனை குறிப்பறிந்த கொண்டார், வடிவேலு! நா8ளக்கு ஒய். எம். சீ. ஏ. கல்லூரி மைதானத் துலே உங்களை சந்திக்கிறேன். கவலைப்பட தீங்க... என்று சைகை செய்து காட்டினர்.

வடிவேலு புரிந்து கொண்டார். அவர்களே அழைத்துக் கொண்டு புறப்பட்டார். மூவரும் வணக்கம் செய்தனர். குணசேகரும மகிழ்ச்சியுடன் விடை தந்தார். விடைதந்தது அவர்களுக்கா மகிழ்ச்சிக்கா... எதிர் காலம் எப்படியிருக்கும் சின்று யார் கண்டார்?