இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளியங்காட்பான் கவிதைகள்
செங்க ரும்பே செங்க ரும்பே !
சிறுவர் வந்து கேட்கிறோம்
'எங்கள் குறையை நீக்க வேண்டு
மென்று கூறி யின்றுனை !
இல்லை யில்லை யெமைவி ரும்பும்
எந்த சீவ ராசியும் !
நல்லை நல்லை யென்று னக்கு
ஞாலங் கூறு தாசியும் !
கனியும் தேனும் பாலு மாகக்
கருதி யுண்டு நாடொறும்
நனியு மழகு செய்து வந்தும்
நாறு தெங்கள் மேனியும் !
கோணல் மாண லாக நீயும்
குள்ள மூங்கிற் குச்சிபோல்
காண வுஞ்ச கித்தி டாமல்
கவினி லாதி ருக்கிருய் !
ஆன போதும் உன்னைக் காணின்
ஆவ லாக, யாவரும்,
'நானும் நீயும் ' என்ன முந்தி
நனியும் தின்ன வேண்டுவர் !
'தேனும் பாலும் தோற்ற தென்னத்
தீஞ்சு வைப யக்குமுன்
மேனி போலி னிக்க நாங்கள்
மெத்த வும்வி ழைகிறோம் !
'செங்கரும்பே, எனஇ னிக்கும்
சிந்தை யெய்திச் சிறக்கவே
எங்க ளுக்கு மட்டு முன்றன்
இரகசி யம்இ யம்பிடே !
154