பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


வந்தியா நின்றளன் வாழ்க்கைத் துணைவர்
வருகை புரிந்ததனால் - தோழி !
இந்தியா வுற்ற சுதந்தர நாளென
இன்பம் பெருகுதடி !




உண்மை உளதாயின்
உள்ளத்தில் ஒப்பற்ற
திண்மை உளதாகும்
தேகத்தில் - ஒண்மை
உளதாகும் வாக்கில்
ஒழுகல் உளதாயின்
உளதாகும் நோக்கில்
உயர்வு

181