ஆபீசில் இந்த நூலைக் கொடுத்து விட்டு வேலை செய்."
அவரது பிடிவாதம் எனக்கு தெரியும். நான் நடுங்கினேன். அழுகை முட்டிமோதியது.
"ஏன் அழுகிறாய் வீணாகும் நூல் தானே? புடவை தைப்பதற்காக எடுத்துச் சென்றேன். என்று உண்மையைச் சொல்லி விடு அதனால் என்ன "?
கடவுளே இரண்டு மீட்டர் நூலுக்காக இரண்டாயிரம் பேர் வேலை செய்யும் இடத்தில் திருடி விட்டேன் என்று நான் போய் நிற்பதா?
பீறிட்ட அழுகையோடு சொன்னேன். "என்னை வேலையை விட்டே நீக்கி விடுவார்கள் அப்பா !”
“வேலை போனால் போகட்டும். நீ இந்த நூலை கொண்டு போய் கொடுத்து விட்டு வா!"
நான் அழுது கொண்டே, "நூலைக் கொடுத்து விட்டுத் திரும்பி உயிரோடு வீட்டுக்கு வரமாட்டேன்". என்றேன்.
உயிரையே விடும்படியான தவறை நீ செய்திருக்கிறாய். அப்படித்தானே?"
"இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன் அப்பா" ! என்று நான் கதறினேன்.
அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. என் சகோதரியை அழைத்தார். "நூலை எடுத்த அந்தக் கையை அடுப்பில் வையம்மா, அது எரியட்டும்" என்றார்!.
அக்காவின் தயவால் அதிலிலிருந்து நான் தப்பியபோதும்,
பல மணி நேரம் ஒற்றை காலில் நிற்கும் தண்டனை எனக்கு வழங்கப்பட்ட பிறகே, நீதி தேவதை திருப்தி உற்றாள்!
கவிஞன் ஒரு நெருப்பு... அவனோடு வாழ்வது நெருப்பில் வாழ்வது போலத்தான்.
51