உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



'உண்மையே பேசு , அறமறிந்து ஒழுகு” - சத்யம் வத; தர்மம் சர- என்று உபநிசத்து இதைச்சுட்டிக் காட்டுகிறது. இதனை நாம் அறிந்தொழுகுவது நம்மை நாம் அறிந்து கொள்வதாகும். தன்னைத்தான் அறிந்து கொள்வதே ஆன்மீகம். "தன்னை அறிந்தவன் தலைவனை அறிந்தான்' என்பதும் நம் நாட்டில் அருகி வழங்கும் ஒரு பழமொழி! 'அகம் பிரம்மாஸ்மி', இது யஜுர் வேத மகா வாக்கியம். இதன் பொருள் 'நானே பிரம்மமாயுள்ளேன்' என்பதாம்.

‘தத்வ மசி' - இது சாம வேத மகா வாக்கியம். இதன் பொருள் "அதுவே நீ” - என்பதாம். இந்த இரண்டு வாக்கியங்களும் மக்களுக்குத் தெரிந்திருந்து வாழ்வில் ஒழுக்கமாகக் கொண்டிருந்தால் இந்த அருமை பாரத தேசம் என்றும் சுவர்க்கமாகவே இருந்திருக்கும்.

சித்தமிசை குடி கொண்டு சித்த மறியா திலகும் திவ்யதே சோமயம் - இதுவே தான். இதை அறிந்தொழுகும் ஒவ்வொருவனும் பிறரால் ஆள முடியாதவனாகிறான். தன்னைத்தான் ஆளுகிறவன் ஆகிறான். தலைவனை (கடவுளை) அறிந்து அடைந்தவனுமாகிறான். ஞானிகள் சாவுக்கு அஞ்சாதவர்கள். சாவை வரவேற்பவர்கள் சாவுக்காகத் -தானே மனிதனின் வாழ்வே அமைந்துள்ளது. கவி. தாகூரும் கூட மரணத்தை வரவேற்கிறார். அவரது கீதாஞ்சலியில் சாவு புகழுக்குரியதாக இருக்க வேண்டும் என்கிறார்.

மனிதனாகப் பிறந்து வாழ்வை வீணாக்கிச் சாவதைக் காட்டிலும் இழப்பு வேறில்லை. மக்கள் மொழியில் எது 'விபத்து' எனப்படுகிறதோ, அதுவே தேவ மொழியில் 'சம்பத்து’ என்பதாம்.

-வெள்ளியைங்காட்டான்