பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


அளவளாவுதல்

வீர ரெனப்படுவோர்வி யந்திடும்
வீர னானவன் யார் ?
பாரி லெளியவர் பயம கன்றிடப்
பலத்தை யூட்டி னவன் !

இனிய ரெனப்படுவோரி சைத்திடும்
இனிய னானவன் யார்?
பனியில் வெம்மையும் வெயிலில் தண்மையும்
படிய மூட்டி னவன் !

பக்தரெனப்படுவோர்ப கர்ந்திடும்
பக்த னானவன் யார்?
யுக்தி முழுவதும் சக்தி யாக்கியே
உலகுக் கூட்டி னவன் !

அரிய ரெனப்படுவோர றிந்திடும்
அரிய னானவன் யார்?
உரிய சுதந்தர வொளியை யேற்றியே
உரிமை மீட்டி னவன் !

புனித ரெனப்படுவோர்புகழ்ந்திடும்
புனித னானவன் யார்?
மனித குலநலன் தனது நலனென
மனத்தில் நாட்டி னவன் !

தலைவ ரெனப்படுவோர்த ரித்திடும்
தலைவனானவன் யார்?
நிலைபெறும்நலம் புரிய வைத்திடும்
நெறியைக் காட்டி னவன் !

இத்தனைக்குண மொத்த மொருவனென்
றிங்கி ருந்தவன் யார்?
சத்தி யத்தினில் சித்தம் வைத்தநம்
சாந்தன்காந்தி மகான் !

84