உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


காணாத கதையாய்க் கற்ற
தங்கையும், தாயும், நானும்
தவிப்பவராகித் தாங்காப்
பங்கமுற்றேங்கல் பாரின்
பண்பிலா அமைப்பா லன்றோ?

பிரிகின்ற கதிரோன் பின்னால்
பேதுற விரட்டிப் பேய்போல்
வருகின்ற இருள்க முங்கால்,
வாழ்கின்ற, மனையில் வைத்தாங்
கெரிகின்ற விளக்கை யேற்கா
'தெதற்கிது? வென்போர் தாம்யார்?
புரிகின்ற கொடிய துன்பப்
பூரியர் புல்லரல்லார் !

உள்ளுவா ருள்ளப் பூவில்
உவகைத்தே னுறுஞ் சொற்கள்
தெள்ளுவார் புலமை யென்னத்
தித்திக்கும் திங்கள் தன்னை,
எள்ளுவார் தாம்யார்? புக்கோர்
இல்லத்தில் பொருளைக் கொள்ளை
கொள்ளுவா ரன்றி மற்றிக்
குவலயத் துள்ளோர்க் குள்ளே !

தன்னிடம், தாகந் தீரத்
தண்ணீரை யருந்திச் செல்ல
மன்னிய சுனைதா னெந்த
மனிதனை யழைத்த தங்கே ?
இன்னிசை பயிலும் வண்டை
இணைத்ததார் மலரி னூடே?
என்னையின் றிவ்வாறிங்கே
எவர்பேசு மாறு செய்தார்?

93