இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3.ஆரண்ய காண்டம்
சுவர்க் கோழிகளின்
ஓசையைத் தவிர
வேறு எதுவும் கேட்காத
அடக்கமான அமைதி,
ஒதுக்கக் கைநீட்டும்
அடர்த்தியான கருக்கிருட்டு.
குடிசையின் மாடத்தில்
அணைந்து விடுமோ என்று
அஞ்சும்படி
மெலிதாக எரியும்
அகல் விளக்கு.
அவள் மார்க் கச்சைபோல்
போதியும் போதாதது மான
மான்தோல் விரித்த
மூங்கில் கட்டில்.
அதன்மீது
அண்டை வீட்டு