இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35 வெள்ளை யானை
சென்ற சிறிது நேரத்தில்
திரும்பி வந்தான்.
வேதனை விழிப்பில்
புரண்டு கொண்டிருந்த
அகலிகை
வியப்போடு பார்த்தாள்.
அகல்யா!
கரையுடைக்கும் வெள்ளம்
கால நேரம் பார்ப்பதில்லை!"
என்று சொல்லி
அவளைத் தொட்டான்.
கணவன் கைபட்டால்
கட்டையாகக் கிடக்கும்
அவளுடம்பு
இன்று -
நாணை வளைத்துவிட்ட
வில்லாக
அதிர்ந்து நிமிர்ந்தது.
முறுக்கேற்றப்பட்ட
வீணை நரம்புகள் மீது
விரல் -
தவறி விழும்போது
ஏற்படும் அபகரமாக
அவளுக்குள் கொந்தளிப்பு.
வந்த அந்தக் கெளதமன்
மெதுவாகச் சிரித்தான்.
அந்தச் சிரிப்பு...இடியுடன் கூடிய
மின்வெட்டாக