பக்கம்:வெள்ளை யானை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43 வெள்ளை யானை

அமைதியாக...
ஆனால்... உறுதியாகக்
கேட்டாள் அகலிகை.

'யார் அந்த ஆடவன்?'
என்றார் முனிவர்.

'இந்திரன்' -
என்றாள் அகலிகை.

'தேவர்கள் சாட்சியாக
முனிவர்கள் சாட்சியாக
நீ கைப்பிடித்த கெளதமன்?'-
பதற்றத்தோடு கேட்டார்
விசுவாமித்திரர்.
"கைப்பிடித்தது
கெளதமர்.
நான் வெறும் தர்ப்பை!

இரவில் அவர்
ஒதுங்கி மூட்டும்
ஓமகுண்டத்தில்
ஒடித்துப் போடப்படும்
சமித்து!

உண்மையில் கற்புக் கெட்டவர்
கெளதமரும்,
முன்னின்று எனக்குத் திருமணத்தை
முடித்து வைத்த
முனி சிரேஷ்டர்களுந்தான்.
ஒரு பெண்
யாரை விரும்புகிறாள் என்பதைப்
புரிந்து கொள்ளாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/33&oldid=1310934" இலிருந்து மீள்விக்கப்பட்டது