இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 44
வற்புறுத்தித் திருமணம் செய்வது
ஒரு விதத்தில்
கற்பழிப்புத் தானே?
பாரதப் பெண்கள்
பறிப்பதற்கு முன்
வாய்திறக்கும் மலர்கள்.
பறித்தபின்
பிணத்திற்குச் சூட்டினாலும்
மெளனித்து மரிப்பவர்கள்.
தங்கள்
பாத தூளியைப் பற்றிப்
பெருமைப்படும்
முனிசிரேஷ்டர்கள்
பர்ணசாலைப் படியைக்
கேட்டுவிட்டா மிதிக்கிறார்கள்?" - என்று குமுறினாள் அகலிகை.
'அகல்யா!
கெளதமன் உன்னை
மீண்டும்
ஏற்றுக் கொள்ளத்
தயாரா யிருக்கிறான்'-
என்றார் விசுவாமித்திரர்.
‘என்னைப் பொறுத்தவரையில்
அது சோர வாழ்க்கை!
மீண்டும்,
அது எனக்கு வேண்டாம்'-
என்றாள் அகலிகை.
'அகல்யா!
உன் முடிவுதான் என்ன?'
என்றார் விசுவாமித்திரர்.