இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதை
உணர்ச்சியின் தும்மல்!
இந்த மாங்குயில்
மிகவும்
நாணமுள்ள பறவை.
பிறரைக் கண்டால்
இலை மறைவில்
பதுங்கிக் கொள்ளும்.
உன்னை மறைத்துக்கொள்.
தானாக வெளிப்பட்டு
ஓயாமல் கூவும்.
இந்த -
நளின நங்கையைப்
பலாத்காரம் செய்ய
நினைக்காதே!
கருத்தால் -
அவளைத் தீண்டிப்பார்.