பக்கம்:வெள்ளை யானை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை

உணர்ச்சியின் தும்மல்!

இந்த மாங்குயில்
மிகவும்
நாணமுள்ள பறவை.
பிறரைக் கண்டால்
இலை மறைவில்
பதுங்கிக் கொள்ளும்.
உன்னை மறைத்துக்கொள்.
தானாக வெளிப்பட்டு
ஓயாமல் கூவும்.

இந்த -
நளின நங்கையைப்
பலாத்காரம் செய்ய
நினைக்காதே!
கருத்தால் -
அவளைத் தீண்டிப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/40&oldid=1310965" இலிருந்து மீள்விக்கப்பட்டது