இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
89 வெள்ளை யானை
தீண்டியது கூட இல்லை.
இவை தீண்டத்தகாதவை
என்றும்
நான் கருதியதில்லை.
காற்றும் நீரும்
சோறும்-
சில நேரங்களில் உடலுறவும்
என் அன்றாடத் தேவைகள்.
நான்-
விருந்துநாட்களில்
குடிக்கிறேன்.
ஆனால் - நான்
எந்த முஸ்லீமையும்
வெட்டிச் சாய்த்ததில்லை.
எந்த இந்துவையும்
உயிரோடு எரித்ததில்லை
எந்தக் கிறித்தவனையும்
சிலுவையில் அறைந்ததில்லை.
சீக்கியக் குடும்பங்களைக்
கூண்டோடு வெட்டிக்
கொலை செய்ததில்லை
ஏனென்றால்...
நான் ஒரு நாத்திகன்