பக்கம்:வெள்ளை யானை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. வெள்ளை யானை


அவளுள் இறங்கியது.
உடம்பே உயிராக மாற
எளிதில் புலப்படாத
ஏதோ ஒன்று
அவளையும்
அப்படகையும்
இழுத்துச் செல்வதை
உணர்ந்தாள்.
கண்ணுக் கெட்டிய துரத்தில்
உடம்பெல்லாம் வாயாகப்
புன்னகைக்கும் கந்தர்வன்
அவளைக்
கைகாட்டி அழைக்கிறான்
படகு நெருங்க நெருங்க
அவன் தொலைவில்
போய்க் கொண்டே இருக்கிறாள்.
அவள்-
நீட்டிய கைகளோடு நிற்கிறாள்


அப்போது
யானையின் கழுத்து மணியாகக்
குலுங்கிச் சிரிக்கும்
தபோவனத்துச் சேடியர்கள்
'அகலிகை! அடியே அகலிகை!'
என்றழைக்கும்
ஆரவாரக் குரல்!


அகலிகை -
பிரமனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/9&oldid=1310228" இலிருந்து மீள்விக்கப்பட்டது