97 பொதிகையைப் பற்றிய பாடும் கு ம ர கு ரு ப ர ரு ம் பாடுகிறாரே, சிங்கமுடன் வெங்களிறும் உடன் விளையாடும் ஒருபால், சினப்புலியும் மட்ப்பிணையும் திளைத்திடும் அங்கொருபால் வெங்கரடி மரையினோடும் விளையாடும் ஒருபால், விட அரவும் மடமயிலும் விருந்தயரும் ஒரு பால் அங்கானமர் கிலம் கவிக்கும் வெண்கவிகை நிழற்கீழ் அம்பொன்முடி சூட்டும் எங்கள் அபிடேகவல்லி செங்கமலப்பதம் பரவும் கும்பமுனி பயிலும் தென்பொதிய மலைகாண் மற்று எங்கள் மலை அம்மே என்று மீனாட்சி அம்மை குறத்திப் பொதிகையைப் பாராட்டியது போல், வாழ்நாள் முழுவதும் பகை உணர் வோடு வாழும் இரண்டு ஜீவராசிகள் இணைந்து வாழ் வதைக் கண்டதும், அது மடம் நிறுவத் தகுந்த இடம் என்று சங்கரர் கண்டது வியப்பல்லவே. இங்கு மடம் நிறுவிய பின்பு விஜய நகர மன்னனான ஹரிஹரன் இந்த சிருங்கேரி கிராமத்திலேயே சங்கராச்சாரியாருக்கு சாலணம் பண்ணிக் கொடுத்திருக்கிறான். அப்படி கொடுத்த 1346-வருவும் முதல் அது சங்கரமடத்தைச் சேர்ந்த ஒரு ஜாகீராகவே இருந்து வருகிறது. விஜயநகர மன்னர்களும், பின்னர் வந்த மைசூர் அரசர்களும் சங்கராச்சாரியாரை -ஜகத் குரு' என்று கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஆதிசங்கரர் பாரதியையும் தாம்வாதிட்டு வென்றமண்டணமிசிரரையும் அவரது மனைவியானபாரதியையும் அழைத்துக்கொண்டே இத் தலத்திற்கு வந்திருக்கிறார். பார தி சரஸ்வதியின் அம்ஸமாகவே அ வ த ரி த் த வ ள் என்று கண்டிருக் கிறார். அந்த பாரதியின் ஞாபகார்த்தமாகவே சாரதா பி ட த் ைத அங்கு நிறுவியிருக்கிறார். ஆதியில்