பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வாதாபி மழகளிறு நாம் வணங்கும் தெய்வங்களிடையே அக்ர ஸ்தானம் வகிப்பவர் விநாயகர். அவர் இன்று நம் கோயில்களில் மாத்திரம் அல்ல, ஆற்றங்கரைகளில் குளக்கரைகளில், ஏன், நாற்சந்திகளில் எல்லாம் இருந்து எல்லோருக்கும் எளியவராக, இனியவராக விளங்குகிறார். ஆனால் இவர் நம் தமிழ் நாட்டிற்கு எப்போது வந்தார்? தமிழர் இதயங்களில் எப்போது இடம் பிடித்தார் என்று தெரிய வேண்டாமா? சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள பாடல்களில் விநாய கரைப்பற்றிய குறிப்பு இல்லாதிருப்பது அவ்வழிபாடு அந்தப் பழைய சங்க காலத்தில் நம் தமிழ் நாட்டில் இல்லை என்று தெளிவுபடுத்தும், தேவாரங்களில் கணபதி வழிபாடு சொல் லப்பட்டிருக்கிறது என்பதை அறிவோம். இன்னும்