உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 என்ற எடையை எல்லாம் ஒதுக்கிவிட்டு கிராமாகவும், கிலோவாகவும் நிறுத்தல் அளவைன்யக் கணக்கிடும் இன்று இறைவன் எடை எவ்வளவு என்று கேட்டால் எளிதாகச் சொல்லக் கூடுமா? முடியாது என்றுதானே கைவிரிப்போம். ஆனால் பக்தர்கள் இதற்கெல்லாம் சளைக்கின்றவர்கள் அல்ல. உலகில் உள்ள மக்களின் தராதரங்களை எல்லாம் எடைபோட்டு சொல்லும் ஆற்றல் உடையவர்கள் அல்லவா அவர்கள். ஆதலால் அவர்களால் அந்த பகவானை எடைபோட முடியாதா என்ன? சரி, ஏனைய்யா கதையை நீட்டிக் கொண்டிருக்கிறீர். பகவானின் எடைதான் எவ்வளவு என்று நீர் கனக் கிட்டிருக்கிறீர் என்றுதானே கேட்கிறீர்கள்? ஈரேழு பதினேழு லோகங்களையும் அவர் காத்து எல்லா இடத் திலும் பரவி நிற்கிற இறைவன்தான் என்றாலும், அவரது எடை எல்லாம் பக்தர் விஜய சிம்மரின் மனைவியான கங்காபாய் அம்மையாரின் மூக்குத்தி எவ்வளவு எடையோ அதற்கும் குறைவான எடை உள்ளவர்தான் அவர். அது என்ன பகவானையும், கங்காபாய் அம்மையார் மூக்குத்தி யையும் சேர்த்து எடைபோட்டு விட்டீரே என்றுதானே கேட்கிறீர்கள். அதன் விவரம் தெரிந்து கொள்ள விரும் பினால், இன்றைய குஜராத்தில் உள்ள தாக்கோர் என்னு' டங்கபுரத்திற்கே செல்ல வேண்டும். அங்கேயே செல் கிறோம் நாம் இன்று. தாக்கோர் எ ன் னு ம் தலத்திற்கு ரயிலிலும் செல்லலாம், ரோட் வழியாகவும் செல்லலாம். பம்பா யிலிருந்து அகமதாபாத் செல்லும் ரயிலில் ஏறி ஆனந்தி என்ற ஜங்ஷனில் ரயில் மாறி அங்கிருந்து ரட்லம் செல்லும் ரயிலில் சென்றால், தாக்கோர் ஸ்டேஷனிலேயே இறங் கலாம். இல்லையென்றால் அகமதாபாத் சென்று அங்கிருந்து காரிலோ பஸ்ஸிலோ சென்றாலும் தாக்கோர் போய்ச் சேரலாம்: தாக்கோர் என்னும் டங்கபுரத்தில் கோயில் கொண்டிருப்பவர் கிருஷ்ண பரமாத்மாவே. துவாரகையில் எழுந்தருளியிருந்த இந்த பரமாத்மா இந்த