பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 சைவக்குடைவரையில் சிவனுடைய சந்தியா தாண்ட வமும், அர்த்த நாரீஸ்வரரும் மஹிஷ மர்த்தனியும் சிறந்த இடம் வகிப்பார்கள். வைஷ்ணவக் குடைவரையில்ோ வைகுண்டநாதரும், நரசிம்மரும், வராகரும் கண்டோர் வியக்கும் வண்ணம் பெரியவடிவில் உருவாகி இருப்பார்கள். சமணக் குகைகள் அளவில் சிறியது என்றாலும் அங்கும் தீர்த்தங்கரர் பலர் நிர்வாணம் எய்திய நிலையில் உருப் பெற்றிருப்பார்கள். இவர்களைத் தவிர துரண்களின் பேரில் உள்ள விதானங்களில் எல்லாம் கந்தருவக் காதலர் கவின் உருவில் நின்று காட்சி தருவர். எல்லா வடிவங் களுமே கலை அழகு நிரம்பியவைகளாகவும் இருக்கும். இக்குடைவரை இன்றைய மைசூர் ராஜ்ஜியத்தில் ஒரு ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் நமது மாமல்லபுரம் பெற்றி ருக்கும் பிரசித்தியைப் பெறவில்லை. என்றாலும் கலா ரசிகர்கள் சென்று காணவேண்டிய அற்புதமான கலைக் கோயில்கள் அவை. இனி பம்பாய் நகரை நோக்கி நடக்கலாம். இல்லை காரிலேயே விரைந்து செல்லலாம். வியாபாரிகளுக்கு பம்பாய் நகரம் ஒரு முக்கியதலம்தான். அங்குதானே மகாலட்சுமி கோயில் கொண்டிருக்கிறாள். எல்லோ ருக்கும் செல்வத்தை வாரி வாரி வழங்குகின்றாள் என்றா லும் நான் சென்று காண வேண்டிய கலைக்கோயில் பம்பாய் நகரில் இல்லை. பம்பாய் நகரை ஒட்டிய கடலில் இருக்கும் ஒரு தீவில் அல்லவா இருக்கிறது. ஆகவே பம்பாயிலிருந்து ஸ்டீம் லாஞ்ச் ஏற்பாடு செய்துகொண்டு ஒருமைல் கடலில் சென்றால் ஒரு சிறு தீவை அடைவோம். அதுதான் எலிபெண்டா தீவு என்பர். அங்கு ஒரு வேளை யானைகள் நிறைந்திருக்குமோ என்று அஞ்சுவோம். அங்கு அன்றிருந்ததெல்லாம் கற்சிலை உருவிலேயுள்ள யானை ஒன்றுதான். அதையும்தான் போச்சுக்கீசிய வெறி யர்கள் அத்தீவில் தங்கியபோது உடைத்தெறிந்து விட்டி ருக்கிறார்களே! ஆதலால் இன்று அங்கே கல்லில் கூட யானை கிடையாது. இங்கும் கடற்கரையில் இறங்கி ஒரு