இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
349 கொண்டிருக்கின்றனர். கோயிலிலே பிருந்தாவனத்து கோவர்த்தனனை பூர்வல்லபர் நாதத் துவாரத்தில் பிரதிஷ்டை செய்யும் சித்திரம் அழகாகத் தீட்டப்பட் டிருக்கிறது. - இன்னும் காலமும் வசதியும் உள்ளவர்கள் இங்கிருந்து கங்ரோலி செல்லலாம். அங்கிருந்து சதுர்புஜர் ரிஷபதேவர் முதலியவர்களை வணங்கித் திரும்பலாம். திரும்பும்போது உதயபுரிக்கு திரும்பவும் எப்போது வர முடிகிறதோ என்று ஏங்கிய வண்ணமே திரும்புவோம். அத்தனை அழகிய நகரம் அது, 'ரமணியம்' என்ற வார்த்தையின் பொருள் அறிய ஒரு நடையே போகலாம் அங்கே.