இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42. புதுடில்லியில் பிர்லாமந்திர் டெல்லி : பிர்லா மந்திர் "பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல காலவகையினானே' என்றார் தமிழ் மொழிக்கு இலக் கணம் வகுத்த பவணந்திமுனிவர். இந்த நியதி இலக்கணத் திற்கு மாத்திரம் அல்ல நகரநிர்மாணத்திற்குமே ஒத்தது தான் என்னும் வகையில் நமது நாட்டின் தலைநகரான டில்லி பழைய டில்லியாகவும் புதிய டில்லியாகவும், உருப் பெற்றிருக்கிறது. ஆம், பழைமையைப் பூராவும் கழித்து 27 38–25