பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

129

அகோர சிவம்

பெருமானையும் தரிசிக்கலாம் , இவர்களைத் தவிர இங்கு கண்டு வணங்க வேண்டியவர்கள் தல விநாயகரான பெரியவாரணப் பிள்ளையார், துண்டி விநாயகர், காட்சி விநாயகர், காசி விசுவேசுரர் முதலியவர்கள் எத்தனையோ உண்டு. கோயிலைச் சுற்றும் போதே இவர்களையும் தரிசித்து வணங்கி விட்டு வெளியே வரலாம்.

இங்கு வெண்காடர் வரப் பிரசித்தி உடையவர் என்பதை முன்பே காண்போம். மார்க்கண்டனைப் போல் எட்டு வயதிலே மரணம் என்றிருந்த சுவேத கேதுவுக்காக, யமனுடைய வலிமை அழித்து சுவேத கேதுவுக்கு நித்யத்வம் வழங்கியவர் இவர் என்றும், பின்னார் வேதராசி என்ற பிராமணனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி நீங்க வகை செய்தவர் இவர் என்றும் தலவரலாறு கூறும். இவரைப் பூஜித்து அருள் பெற்றவர்களோ, இந்திரன், ஐராவதம் முதலியோர். இவற்றை எல்லாம் விரிக்கில் பெருகும். இக்கோயிலுக்கு ஞான சம்பந்தர் மாத்திரம்தான் வந்தார் என்றில்லை. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் எல்லோருமே வந்திருக்கிறார்கள். வெண்காடரைத் துதித்துப் பாடியிருக்கிறார்கள்.

வே.மு.கு.வ -9