பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

141

பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளி வந்தவன் என்றும் கூறுகின்றனர் அங்குள்ளவர்கள். ஆம்! சூரசம்ஹாரம் முடிந்தபின் இவன் கடலுள் பாய்ந்து கிட்டத்தட்ட இருநூறு மைல் நீந்தி இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலே வந்து கரையேறியிருக்க வேணும். இல்லாவிட்டால் இவன் எப்படி இந்தச் சாய்க்காட்டில் வந்து நின்று கொண்டிருக்க முடியும் என்று கேட்கிறேன்? பல்லவனீச்சுரரைக் காணச் சென்ற நாம் வில்லேந்திய வேலனையுமே கண்டு தொழுது திரும்புகின்றோம் இன்று.