பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

19

கோலமா மஞ்ஞை தன்னில்
குலவிய குமரன் தன்னை
பாலன் என்றிருந்தேன் அந்நாள்,
பரிசு இவை உணர்ந்திலேன் யான்,
மால் அயன் தனக்கும் மேலை
வானவர் தனக்கும், யார்க்கும்
மூல காரணமாய் நின்ற
மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ!

என்று பாடிப் பரவுகிறான். இப்படிப் பாடியவன் அப்பெருமான் ஊர்ந்து வந்த மயிலுருவத்திலேயே, தான் அவருக்கு வாகனமாக இருக்க அருள் புரிய அவரை வேண்டுகிறான். அவ்ரும் தண்தமிழ்நாட்டிலே வராக நதிக்கு வடகரையிலே மயில் வடிவம் கொண்ட மலையாக நின்று தவம் செய்தால், அவன் விருப்பம் நிறைவேறும் என்கிறார். அப்படியே மயில் உருவத்தில் மலையாகி சூரபதுமன் தவம் செய்த இடமே மயிலம் என்னும் மயூராசலம்.

மயிலம் முருகன் கோயில்