பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

237

ஆமருவி அப்பன்

கேட்டால் கோயில் நிர்வாகிகள், முன்னரே கம்பனையும் அவர் மனைவியையும் இங்கு பிரதிஷ்டை வைத்திருக்கிறார்கள். அவர்கள் பின்னமுற்று விட்டார்கள் என்பதனால் புதிதாகக் கம்பனுக்கும் அவன் மனைவிக்கும் சிலைகள் அமைத்துப் பழைய சிலைகளுடனே நிறுத்தி யிருக்கிறோம்' என்பார்கள். ராமாயணம் என்னும் ராம கதை பாடினான் என்பதற்காக, வேதபுரி ஈசுவரர் கம்பனைத் தன் கோயிலுள் இருக்க அனுமதிக்கவில்லை. ஆனால் ஆமருவியப்பன் அவனுக்கு அக்ரஸ்தானமே கொடுத்திருக்கிறான். 'அரன் அதிகன், உலகு அளந்த அரி அதிகன்' என்றெல்லாம் வாதிட்டு மயங்குபவர்களை 'அறிவிலார்' என்றே கூறியிருக்கிறான்.

வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும்
விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னில்
படிவங்கள் எப்படியோ?

என்று வேதபுரியானைப் பாடினபிறகே,