பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

7

திருப்பாதிரிப்புலியூர் அரன்

ந்நில உலக மக்களிலே மூன்று வகையினர். ஒரு வகை, பிறர்க்குச் செய்யும் நல்ல காரியங்களை எல்லாம் அவர்களிடம் முன்கூட்டி சொல்லாமலே தாமாகச் செய்து முடிப்பவர்கள, இன்னொரு வகை, செய்யுங் காரியங்களை எல்லாம் முன் கூட்டியே தம்பட்டம் அடித்து அதன் பின்பு செய்து முடிப்பவர்கள். மூன்றாவது வகை, ஏதோ வாய் விரிய அதைச் செய்வதாக, இதைச் செய்வதாகச் சொல்வார்கள்; ஆனால் ஒன்றுமே செய்யமாட்டார்கள். இவர்கள் மூவரையும் பெரியவர், சிறியவர், கயவர் என்று வகைப்படுத்துகிறார் ஒரு புலவர். இவர்களுக்கு உவமை தேடித் திரிகிறார். அவர் கண்டுபிடித்த உவமைகளே பலா, மா, பாதிரி மரங்கள், பலா பூக்காமலேயே காய்க்கும் இயல்புடையது. மா பூத்துக் காய்க்கும் தன்மையுடையது. பாதிரியோ பூக்கும், ஆனால் காய்க்காது. இதைச் சொல்கிறார் ஒரு பாடலில்,

சொல்லாமலே பெரியர்,
சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் செய்யார்
கயவரே-நல்ல
குலாமாலை வேற்கண்ணாய்