பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இரண்டாம் பதிப்பின் முன்னுரை

இப்புத்தகம் வெளிவந்து மூன்று வருடங்களுக்குள் அச்சிட்ட புத்தகங்கள் எல்லாம் செலவாகிவிட்டன. இன்னும் புத்தகம் கேட்பவர்களுக்கு இல்லை என்னாதபடி இரண்டாம் பதிப்பையும் வெளியிடுகிறோம்.

பல யாத்திரீகர்கள் இந்தப் புத்தகங்களை வாங்கிக் கொண்டே யாத்திரை துவங்குகிறார்கள். புத்தகத்தில் சொல்லியிருப்பன, கோவில்களை, அங்குள்ள வடிவங்களை, அத்தலத்தைப்பற்றிய வரலாறுகளை எல்லாம் நன்றாக அறிந்து கொள்ள உதவுகின்றன என்று எழுதுகிறார்கள். இப்படி எல்லாம் ஊக்குவிக்கும் அன்பர்களுக்கு என் நன்றி.

பலருக்கு புத்தகம் பயனுடையதாக இருத்தல் கண்டு மகிழ்கிறேன். இப்புத்தக வெளியீட்டை சிறப்பாக நடத்தி எனக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்த தருமபுரம் மகாசன்னிதானம் அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.

'சித்ரகூடம்'
திருநெல்வேலி-6
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
1.5.64