பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வேங்கடம் முதல் குமரி வரை

ராமானுஜருக்குப் பின், வைணவக் கோட்டையைக் கட்டிப் பாதுகாத்த பேரறிவாளர் வேதாந்த தேசிகர். அவருமே அத்திகிரியானிடம் அளவிலாப் பக்தி கொண்டவர். 'காசி முதலாய நன்னகர் எல்லாம் கார்மேனி அருளாளன் கச்சிக்கு ஒவ்வா!' என்ற அழுத்தமான கொள்கை உடையவர். ராமானுஜரது ஆசிரியர் என்று சொல்லத்தக்க பெருமை உடைய திருக்கச்சி நம்பியும் வரதராஜனின் நல்லருளுக்கு ஆளானவர். இவரைப் பற்றி ஒரு சுவையான கதை.

வரதனுக்குக் கைங்கர்யம் செய்து, நேருக்கு நேர் பேசும் வாய்ப்பும் பெற்றிருக்கிறவர் அவர். அதனால்தான் எல்லோரினும் சிறந்தவர் என்ற கர்வம் அவருக்கு. இவருடைய அடிப்பொடியைத் தலையில் அணிந்து கொள்கிறான், தாழ்த்தப்பட்ட ஒருவன். இவனைப் பற்றி வரதனிடம் கேட்டபோது, அவனுக்கு முத்தி நிச்சயம் என்கிறார் அவர். அவனோ மோக்ஷ, உலகத்திலும் நம்பியின் அடிப்பொடி கூடுவதையே பாக்கியமாகக் கருதுகின்றான்.

ஆதலால் திரும்பவும் வரதனிடம், தனக்கும் மோக்ஷம் சித்திப்பது உறுதி தானே என்று கேட்கிறார் நம்பி. அது சந்தேகத்துக்குரியது என்று கையை விரித்து விடுகிறார், வரதர். பகவத் பக்தியைக் காட்டிலும் பாகவத அபிமானமே சிறந்தது என்பதை வரதராஜரே திருக்கச்சி நம்பிக்குக் கற்பித்தார் என்று பெறப்படுகிறது, இதனால்.

இராமானுஜர், வேதாந்த தேசிகர், திருக்கச்சி நம்பிகளைப் போலவே, கூரத்தாழ்வானும் இங்கேயே தங்கி, வைணவ மதப் பிரசாரம் செய்த பக்தன். இன்னும் எண்ணிறந்த பக்தர்கள் ஆபரணங்களை வரதருக்கு அளித்து மகிழ்ந்திருக்கிறார்கள். வெங்கடாத்திரி சுவாமிகள் அளித்துள்ள கொண்டை அழகுடையது. அதை விடப் பிரபலமானது கிளைவ் அளித்துள்ள மகாப் பதக்கம். இந்த வரதனை,