பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

நீளத் திரிந்து உழன்றாய்
நீங்கா நிழல்போல
நாளைக்கு இருப்பாயோ?
நல்குரவே! - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால்
நீ எங்கே? நான்எங்கே?
இன்றைக்கே சற்றே இரு!

என்பது பாட்டு.

நின்றைக்கே செல்லலாம், நாமும் - நினைப்பினால் கோயில் செய்த பூசலாரை நினைத்துக் கொண்டே. அங்குள்ள பக்தவத்சலரை, என்னைப் பெற்ற தாயாரை, இருதயாலயரை, மரகதவல்லியை வணங்கலாம். அதுவரையில் நாம் செய்த பழவினைகளும் நம்மோடு இருந்து விட்டுப் போகட்டுமே என்று அவைகளிடம் கொஞ்சம் அனுதாபமும் காட்டலாம்தானே.