பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

157

சம்பந்தரோ,

வரைவந்த சந்தொடு அகில் உந்தி வந்து
முளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறி தேறல்
ஆடுதிரு முல்லை வாயில் இதுவே!

என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

இங்குள்ள இறைவன் முல்லை வனநாதர், இறைவி கோதை. இங்கேயும் ஒரு பாட பேதம். கிள்ளி வளவனது குதிரை ஊர்ந்து செல்லும் போது, முல்லைக் கொடி ஒன்று அக் குதிரையின் காலைப் பிணைத்தது என்று சொல்கிறது, தென் திருமுல்லைவாயில் புராணம்.

இந்தப் பாடங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து முடிவு காண வேண்டியதை ஆராய்ச்சியாளர்களுக்கு விட்டுவிடலாம். மூன்று கதையிலும், ஆம்! களிறு தேர் குதிரை என்றெல்லாம் பாடம் மாறுபட்டாலும் பிணைத்தது என்னவோ முல்லைக் கொடி என்பதை மறுப்பவர் இலர். முல்லைக் கொடி தடுத்த முதூர் திருமுல்லை வாயில் என்று பிரசித்தி பெற்றிருப்பதும் உண்மை. அது போதும் அல்லவா நமக்கு?

நாம் இன்று பார்க்கப் போவது வடமுல்லை வாயிலை (தென் திருமுல்லை வாயில் தொலைதூரத்தில் தெற்கே இருக்கிறது. மிகவும் சின்னஞ் சிறிய கோயில்தான். ஆதலால் அதை விட்டு விடலாம்தானே). இந்தத் திருமுல்லை வாயில் சென்னைக்கு மேற்கே பன்னிரண்டு மைல் தொலைவில் இருக்கிறது. சென்னையிலிருந்து செல்வோர் ஆவடி செல்லும் பாதையில் சென்று கொஞ்சம் வடக்கே திரும்பி ஊருக்குள் போக வேண்டும்.

கோயில் கோபுரம் தெற்கு நோக்கி இருந்தாலும் மாசில்லாமணி நாதர் கிழக்கு நோக்கியே இருக்கிறார். மகா