பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18. ஒற்றியூர் உறை உத்தமன்

ம்சாரம் ஒரு பெரிய சாகரம். என்றாலும் அந்தச்சாகரத்தில் புகுந்து குளிக்காதவர்கள் இல்லை. அப்படிப் புகுபவர்களில் அலைகளால் மோதுண்டு, சாகரத்திலேயே அமிழ்ந்து விடுகிறவர்கள்தான்.அனந்தம். ஏதோ ஒரு சிலரே இச்சாகரத்தில் நீந்தவும் முக்குளித்து வெளியே வரவும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி யிருக்க, இச்சாகரத்தைக் கடத்தலோ அருமையினும் அருமை. அதற்குத் தக்கதொரு தோணி வேண்டும். தோணியை வலிக்க நல்ல வலுவான துடுப்பு வேண்டும். இப்படி யெல்லாம் சென்றாலும், சாகரத்திலே பாறைகள் வேறே மறைந்திருக்கும். கடும் புயல் வேறே அடிக்கும்.

இதையெல்லாம் வெற்றி கண்டு வாழ்வின் பேறு பெறுவதற்குத் துணையாயிருப்பது இறை உணர்வு. அந்த இறை உணர்வில் லயித்து, இறை வழிபாட்டில் திளைப்பவர்களே மனிதரில் தலையாய மனிதர்!’

இப்படியெல்லாம் விரித்துச் சொல்வது நானல்ல. சமயக் குரவரில் நல்ல பழுத்த அனுபவம் உடையவரான அப்பர் அடிகளே சொல்கிறார். அதுவும் கடற்கரையில் உள்ள திருவொற்றியூர் சென்று, அங்குள்ள ஆதிமூர்த்தியைக் கண்டு வணங்கிய பொழுது சொல்கிறார். ஒற்றியூரை ஒட்டியுள்ள கடலைக் கண்டதும், கடற்கரையில் நின்ற அப்பர் பாடுகிறார்.

மனம் எனும் தோணிபற்றி
மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றிச்
செறி கடல் ஓடும்போது