பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

வேங்கடம் முதல் குமரி வரை

அவளும் சம்மதிக்கிறாள். ஆனால் நிபந்தனை விதிக்கின்றாள். தன்னை ஒருக்காலும் பிரியேன் என்று சுந்தரர் சத்தியம் செய்ய வேண்டும் என்று.

காரிய சித்தியிலேயே கண்ணாய் இருக்கும் சுந்தரரோ அதற்கும் சரி என்கிறார். இறைவனோடு மிக்க உரிமை கொண்டாடும் சுந்தரர் இதற்கும் ஒரு வழி கண்டு பிடிக்கின்றார்.

இறைவனிடமே, 'ஐயனே! நான் இந்தச் சத்தியத்தில் நிலைத்து நிற்கப் போவதில்லை. ஆதலால் நான் சங்கிலியுடன் உன்சந்நிதிக்குச்சத்தியம் செய்ய வரும்போது, நீ கோயிலினுள் இராதே. கோயில் பிராகாரத்தில் உள்ள மகிழ மரத்தடிக்குச் சென்று விடு. அப்படிச் சென்றுவிட்டால் என் சத்தியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இராதல்லவா? என்கிறார்.

இழுத்த இழுப்புக்கெல்லாம் இறங்கும் இறைவனும் சரி என்கிறார். ஆனால் ஒரு சிறு குறும்பு மாத்திரம் செய்கிறார். அன்றிரவே சங்கிலியின் கனவில் தோன்றி, நங்கையே! நாளை ஆரூரன் சூள் உரைக்க உன்னையும் அழைத்துக் கொண்டு, என் சந்நிதிக்கு வருவான். நீ சந்நிதியில் சத்தியம் செய்யவேண்டாம். பக்கத்தில் உள்ள கொங்கலர் பூ மகிழின் கீழ்ச் சத்தியம் செய்தால் போதும் என்று சொல்லு!’ என்று கூறி மறைகிறார்.

அவளும் மறுநாட் காலை அப்படியே