பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

219

இந்தக் கோயில் கட்டிய இடம் எல்லாம் கதலி வனமாக இருந்ததாகவும், அந்தக் காட்டை அழித்தபோது வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த பிள்ளையார் ஒருவர் கிடைத்தார் என்றும், அவரே வண்டுவனப் பிள்ளையார் என்று இன்றும் விளங்குகிறார் என்பதும் கர்ண பரம்பரை.

இத் தலத்துக்குச் சம்பந்தரைத் தவிர, மற்றச் சமயக் குரவர் மூவருமே வந்திருக்கிறார்கள். கழுக்குன்றமர்ந்த கற்பகத்தைக் கண்ணாரக் கண்டதாகப் பாடிப் பரவசம் அடைகிறார், அப்டர். 'சென்று சென்று தொழுமின் கழுக்குன்றமர்ந்த பிரானை!' என்று சுந்தரர் மக்களை யெல்லாம் வேண்டிக் கொள்கிறார்.

எல்லோருக்கும் மேலாக மாணிக்கவாசகர் கழுக்குன்றத்து உச்சியானை நினைந்து நினைந்து பாடுகிறார். 'கணக்கில்லாத திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே!' என்று சொன்னதோடு திருப்தி அடையாது, ‘காண ஒண்ணாத திருக்கோலம் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே!' என்றும் கூறி, அவர் பெற்ற அனுபவத்தை விரிக்கிறார். மணிவாசகர் திருவடி என்று ஓரிடத்தையும் பார்க்கலாம் கிரிசுற்றும் போது. அங்கு மணிவாசகர் விழா சிறப்பாக நடைபெறுகிறது, வருஷம் ஒரு முறை.

இந்தத் தலத்தில் வேதகிரியானையும் திரிபுர சுந்தரியையும் விடப் பெருமையுடையது சங்கு தீர்த்தம். ஊருக்குத் தென் கிழக்குக் கோடியிலே இருப்பதுதான் அச் சங்கு தீர்த்தம் என்னும் தெப்பக்குளம். ஒரு நல்ல நீராழி மண்டபம். இந்தக் குளத்தின் தண்ணீரில் தாமிரச்சத்து இருக்கிறது என்கிறார்கள். இக்குளத்தில் பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒரு தரம் ஒரு சங்கு 'பிறக்கிறது. (அப்படிக் கிடைத்த சங்குகளை யெல்லாம் கோயிலிலே சேகரித்து வைத்திருக்கிறார்கள்)

சங்கு பிறக்கும் சமயத்தில் இந்தத் தீர்த்தத்தில் குளிப்பது மிகவும் விசேஷம். கும்பகோணத்து மகாமக தீர்த்தத்தோடும்,