பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலரால் அணி. செய்தி ருக்கும் வேங்கடவனின் திருக்கோலத்தைக் கண்டு மகிழலாம். அன்றுதான் கண்களை

புஷ்கரணி - வராகர் கோயில்

மறைத்து எப்போதும் இட்டிருக்கும் நாமத்தை அகற்றி விட்டு, மெல்லியதான நாமம் ஒன்றை கொண்டு, அவனுமே கண் திறந்து குளிர்ந்த நோக்கோடு நம்மை அருள்பாலிப்டான்.

இதே பூலங்கி தரிசனத்தை விரும்பினால் மறு நாள் (வெள்ளிக் கிழமை) காலையிலும், சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி எல்லாம் முடியும்வரை திகுமாமணி மண்டபத்தில் காத்திருந்து, பின்னர் உள்ளே சென்று காணலாம் - வசதி படைத்தவர் மட்டும்.

கலை ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் பூலங்கி சேவை, அல்லது தோமாலை சேவையினால் எல்லாம் திருப்தி அடைய முடியாது. அணியும் பணியும் இல்லாமல், வேங்கடவனை அவனிருக்கும் வண்ணத்திலே கண்டு தொழ, வெள்ளிக்கிழமை பகல் பத்து மணிக்குத் திரும்பவும் செல்ல வேணும். அன்றுதான் பணம் படைத்த பக்தர்கள் நூற்றுக் கணக்காகவும், ஆயிரக் கணக்காகவும் கட்டணங்கள் கட்டி, கர்ப்பூரக் கிண்ணி, கஸ்தூரிக் கிண்ணி என்றெல்லாம் ஏற்பாடுகள் செய்து திருமஞ்சனம் ஆட்டுவார்கள்.