இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
229
வடிவழகைக் கண்ட பின், கண்கள் மாத்திரம் என்ன, இதயமுமே நிறைந்து விடுமே.
மற்றவைகளைப் பார்க்க; அவ்வடிவங்களை உள்ளத் திருத்த இடம் ஏது? ஆதலால் கோயிலைக் கடந்து வெளியே வருகிற போது, நாமும் அந்தப் பிள்ளைப் பெருமாள் ஐயங்காருடன் சேர்ந்து,
பிடிக்கும் பரசமயக்குல வேழம்பினிற, வெகுண்டு
இடிக்கும் குரல் சிங்கஏறு அலையான், எழுபாரும் உய்யப்
படிக்கும் புகழ்எம் இராமானுஜமுனி பல்குணமும்
வடிக்கும் கருத்தினற்கே திருமாமணி மண்டபமே
என்று பாடிக் கொண்டே திரும்பலாம்.