பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

முன்னர்க் கோயில்களுக்குச் சென்றால், மூர்த்திகளை அவைகள் இருக்கும் வண்ணத்திலே படம் எடுக்க அனுமதிக்காத தர்மகர்த்தர்களும் அர்ச்சகர்களும் இன்று நான் கோலுக்குச் செல்லும்போது மிக்க ஆர்வத்தோடு வரவேற்கிறார்கள்; வேண்டும் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.

ஈட்டுரைகள் வெளி வரும்போது ஆர்வத்தோடு படிந்தவர்களில் நண்பர் திரு.ஏ. கே. வேலன் ஒருவர். அவர் எனக்கு முன்பு அறிமுகம் இல்லாதவர். அவர்தான் இக் கட்டுரைகள் புத்தக உருவில் வர வேண்டும் என்று விருமிபினார். நண்பர் திரு. வே. நாராயணன் அவ் விருப்பத்தை வெளியிட்டுப் புத்தகம் உருவாவதைத் துரிதப் படுத்தினார்.

இவர்களது அன்பும் ஆதரவுமே இக் கட்டுரைத் தொகுதின் முதல் பாகத்தைப் 'பாலாற்றின் மருங்கிலே' என்ற பெயரோடு இப்போது வெளியிடத் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.. இலர்களுக்கு என் நன்றி. 'கல்கி'யில் வந்த கட்டுரைகளைப் புத்தக உருவில் வெளியிட அனுமதி அளித்த 'கல்கி' ஆசிரியருக்கும் என் நன்றி.

சுட்டுரைகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அவற்றில் எத்தனையோ குறைபாடுகள். "இதைச் சொல்ல விட்டு விட்டீர்கள், இதைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்?" என்று எழுதும் அன்பர் பலர்.

'குறித்த அளவிலே சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்ல நான் தவறுவதில்லை. சொல்லிடில் எல்லை இல்லை!' என்பது தான் நண்பர்களுக்கு நான் தரும் பதில். இப் புத்தகம் அச்சுக்குப் போகுமுன், பிரதிகளைச் சரிபார்த்துத் தந்தவர் சகோதர் திரு. சா. கணேசன். அவர்களுக்கு என் நன்றி.

இப் புத்தகத்திற்கு ஒரு அருமையான முகவுரையை வழங்கியிருக்கிறார்கள், வேலூர் ஜில்லா நீதிபதி நண்பர்