பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

71

திருவுண்ணாழிப் பிராகாரத்தையே ஒரு சுற்றுச் சுற்ற வேண்டும்.

அங்கு செல்லும்போது, அர்ச்சகர், 'இங்கு கர்ப்ப கிருஹம் பிரணவ வடிவத்திலே அமைந்திருக்கிறது. இந்தப் பிரணவ வடிவமான கர்ப்ப கிருஹம், இந்த உத்தர ரங்கத்திலும் அந்தத் திருவரங்கத்திலும் தவிர, வேறு இடங்களில் இல்லை!' என்றெல்லாம் சொல்லுவார். அதற்கெல்லாம் செவி சாய்க்காது, இருட்டில் கொஞ்சம் உற்று நோக்கினால், இரண்டு சிலா உருவங்களைப் பார்க்கலாம். ஒன்று ஆண்டாள், மற்றொன்று கண்ணன். திறமையான சிற்பி செதுக்கிய பொற்சிலைகள் அவை. இந்தச் சிலைகளைக் காண்பதற்கென்றே ஒரு நடை போகலாம் இந்தக்கோயிலுக்கு. அத்தனை அழகு வாய்ந்தவை. -

கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து, கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்த விக்ரம சோழன் காலத்துக்கு முன்னாகவே இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. விக்ரம சோழன் கீழ்ச்சிற்றரசனாக இருந்த குலசேகர சாம்புவராயன் செய்துள்ள தானங்களைப் பற்றியும், பல்லவ மன்னன் நந்திவர்மன் மகன் கம்ப வர்மன் செய்துள்ள தானங்களைப் பற்றியும், கல்வெட்டுகள் அங்கே உண்டு. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே இந்த ஊருக்கே நந்திவர்ம சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் வழங்கியதாகவும் அறிகிறோம்.

இவை யெல்லாம் இக் கோயில் நிரம்பப் புராதனமானது என்பதைக் காட்டும். இந்தக் கோயில் ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப்படவில்லை என்பர். அரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளைப் பற்றிய பாடல்கள் திவ்ய பிரபந்தத்தில் எவ்வளவோ உண்டு. என்றாலும் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறும் பாடல் ஒன்றே ஒன்று தான.