பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. குடந்தைகிடந்த ஆரா அமுதன்

தில்லைச் சிற்றம்பலவன் கோயில் கொண்டிருக்கும் சிதம்பரத்துக்குப் பக்கத்திலே வீரநாராயணபுரம் என்று ஒரு வைஷ்ணவ க்ஷேத்திரம். அங்கு நாதமுனிகள் என்று ஒரு பெரிய யோகி. ஆழ்வார்களுக்குப் பின் தோன்றிய வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையிலே முதல் ஸ்தானம் வகிப்பவர் இவரே, இவர் சங்கீதத்தில் நல்ல நிபுணர். இந்த நாதமுனிகள் குடும்ப சகிதம் யாத்திரை செய்கிறார். வடமதுரை, பிருந்தாவனம், துவாரகை, கோவர்த்தனம், அயோத்தி,பத்ரிகாச்சிரமம் முதலிய வடநாட்டுத் தலங்களைத் தரிசித்த பின், தென்னாட்டில் அகோபிலம், திருப்பதி, காஞ்சி, ஸ்ரீரங்கம் முதலிய தலங்களையும் தரிசித்து விட்டுக் கும்பகோணத்தில் சாரங்க பாணியைத் தரிசிக்க வந்து நிற்கிறார். அப்போது அங்கு வந்திருந்த வைஷ்ணவ யாத்திரிகர்களில் ஒருவர்.

ஆரா அமுதே அடியேன் உடலம்
நின்பால் அன்பாயே
திராய் அலைந்து கரைய
உருக்கு கின்ற நெடுமாலே!