பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

17

அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
இருவரும் கவரிவீச
விரிகடல் உலகம் ஏத்தும்
வெண்ணெய் மன் சடையன்வன்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி

என்பது கம்பன் காட்டும் பட்டாபிஷேகக் கோலம்-இந்தக் கோலத்தில் இல்லை இந்தப் பட்டாபிராமன். அஞ்சலி ஹஸ்தனாக 'ஏவல் கூவப் பணிசெய்யும்' பான்மையில்